பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகை திரிஷா படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ஓய்வு நேரங்களில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். செல்லப்பிராணிகளுடன் இருக்கும்படியான வீடியோக்கள், புகைப்படங்களை அதிகமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவருக்கு இவற்றின்மீது மிகப்பெரிய அளவில் பிரியம் காணப்படுகிறது. தெரு நாய்களை தத்தெடுக்க எப்போதும் தனது ரசிகர்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார்.
இதற்கிடையே ஜோரோ எனும் நாய் செல்லமாக வளர்த்து வந்தார். அவற்றுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளையும் அவ்வப்போது வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், இன்று (டிச.,25) அதிகாலையில் அந்நாய் திடீரென இறந்துள்ளது. இதனை வருத்தத்துடன் தெரிவித்துள்ள திரிஷா, 'எனது மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் உயிரிழந்தான். இனிமேல் என் வாழ்க்கை பூஜ்ஜியம் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். நானும், எனது குடும்பமும் அதிர்ச்சியில் உடைந்துபோயுள்ளோம். சிறிதுகாலம் பணியில் இருந்து விலகியிருக்க உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.