கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
இயக்குனர் ஷங்கர் தமிழில் பல பிரமாண்டமான படங்களை இயக்கியவர். தற்போது தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கியுள்ளார். ராம் சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். ஜன., 10ல் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
ஒரு காலகட்டத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க தென்னிந்தியாவில் பல உச்ச நடிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இப்போது கேம் சேஞ்சர் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷங்கர் கூறியதாவது, "தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் ஆன சிரஞ்சீவியை வைத்து படம் இயக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக கனவு கண்டேன். ஆனால் அது இதுவரை சாத்தியமாகவில்லை. அதேபோல் கொரோனா காலகட்டத்தில் பிரபாஸிடம் ஒரு கதை ஒன்று கூறினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் நிறைவேறவில்லை" என தெரிவித்துள்ளார்.