நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

நகைச்சுவை நடிகர் சூரி தமிழில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளிவந்த 'விடுதலை 1' படத்தின் மூலம் சூரி கதையின் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 என கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்துள்ளார்.
தற்போது அளித்த பேட்டி ஒன்றில் சூரி கூறியதாவது, "அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். இனி கதையின் நாயகன் ஆகவே என் பயணம் தொடரும். நல்ல கதை அமைந்தால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பேன். ஆனால், அந்த படத்தில் ஹீரோ யார் என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எப்போதும் ஹீரோ என் தம்பி சிவகார்த்திகேயன் தான்" என தெரிவித்துள்ளார்.