2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

நகைச்சுவை நடிகர் சூரி தமிழில் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக மற்றும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளிவந்த 'விடுதலை 1' படத்தின் மூலம் சூரி கதையின் நாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 என கதையின் நாயகனாக தொடர்ந்து நடித்துள்ளார்.
தற்போது அளித்த பேட்டி ஒன்றில் சூரி கூறியதாவது, "அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்து வருகிறேன். இனி கதையின் நாயகன் ஆகவே என் பயணம் தொடரும். நல்ல கதை அமைந்தால் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பேன். ஆனால், அந்த படத்தில் ஹீரோ யார் என்பதை சிவகார்த்திகேயன் தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு எப்போதும் ஹீரோ என் தம்பி சிவகார்த்திகேயன் தான்" என தெரிவித்துள்ளார்.