அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகர் சூர்யா நடித்து கடந்த 10 வருடங்களாக திரைக்கு வந்த எந்தவொரு படமும் வெற்றி பெறவில்லை. குறிப்பாக சூர்யா நடித்து கடைசியாக ‛கங்குவா' படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் ஓடிடியில் சூர்யா நடித்து வெளிவந்த ‛சூரரைப் போற்று, ஜெய் பீம்' என இரு படங்களும் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று வருகிறது. அப்போது 300 ரசிகர்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து ரசிகர்களிடம் போட்டோ எடுத்து அவர்களிடம் உரையாடினார். அப்போது சூர்யா கூறியதாவது, "எனது ஒவ்வொரு படம் வெளியீட்டிற்கான இடைவெளி அதிகமாக உள்ளது. இது உங்களுக்கு வருத்தமாக இருக்கும். இனிமேல் ஒரு வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாகும் என உறுதியாக சொல்கிறேன்" என இவ்வாறு சூர்யா உறுதியாக பேசியதால் ரசிகர்கள் உற்சாகமாக இது குறித்து பகிர்ந்து வருகின்றனர்.