இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

சியாம் பிரவீன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”. சரத்குமாரின் 150வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆழியா என்னும் குழந்தை நட்சத்திரமும் நடித்துள்ளார்.வரும் டிசம்பர் 27ம் தேதி படம் வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஆழியா, நடிகர் சரத்குமாரை பார்த்து ‛அங்கிள்' எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அதுக்குறித்து பேசிய சரத்குமார், ‛‛நான் எப்போதும் இளமை தான்; எனக்கு வயசு ஆகவே ஆகாது. ஆழியா வளர்ந்து என்னுடைய படத்தில் ஹீரோயினியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை'' என்றார். அப்போது செய்தியாளர்கள் ‛சூர்யவம்சம் 2' குறித்த அப்டேட் கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத்குமார், ‛‛அது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விரைவில் அறிவிப்பார்'' என்றார்.