சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி | தந்தை நடிகரின் மிரட்டலால் ஓட்டம் பிடித்த நடிகை | 'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்' | தெலுங்கு லிரிக் வீடியோவில் புதிய சாதனை படைத்த ஏஆர் ரஹ்மானின் 'பெத்தி' | முந்தைய சாதனையை முறியடிக்குமா விஜய் - அனிருத் கூட்டணி? | இரண்டு கைகளிலும் கடிகாரம் அணிவது ஏன் ? ; அபிஷேக் பச்சனின் அடடே விளக்கம் | ‛ப்ரோ கோட்' டைட்டில் விவகாரம் ; ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு | நவம்பர் இறுதியில் ரீ ரிலீஸ் ஆகும் மகேஷ்பாபுவின் பிசினஸ்மேன் | போலியான சோசியல் மீடியா கணக்குகள் ; சரத்குமார் பட நடிகை எச்சரிக்கை |

சியாம் பிரவீன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”. சரத்குமாரின் 150வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆழியா என்னும் குழந்தை நட்சத்திரமும் நடித்துள்ளார்.வரும் டிசம்பர் 27ம் தேதி படம் வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஆழியா, நடிகர் சரத்குமாரை பார்த்து ‛அங்கிள்' எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அதுக்குறித்து பேசிய சரத்குமார், ‛‛நான் எப்போதும் இளமை தான்; எனக்கு வயசு ஆகவே ஆகாது. ஆழியா வளர்ந்து என்னுடைய படத்தில் ஹீரோயினியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை'' என்றார். அப்போது செய்தியாளர்கள் ‛சூர்யவம்சம் 2' குறித்த அப்டேட் கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத்குமார், ‛‛அது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விரைவில் அறிவிப்பார்'' என்றார்.