மம்முட்டி வில்லனாக நடிக்கும் ‛கலம்காவல்' | ஹரிஷ் கல்யாணுக்காக பாடியுள்ள சிம்பு! | வெப் தொடருக்காக ஒன்றிணையும் மாதவன், துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்! | தனுஷின் அடுத்த ஹிந்தி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ஜனநாயகன் பட தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் போர் தொழில் பட இயக்குனர்! | ஆறு மாதத்திற்கு முன்பே சம்பளம் தந்த கமலுக்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் | ரூ. 25 கோடி வசூலைக் எட்டிய குடும்பஸ்தன் படம்! | தனுஷ், தமிழரசன் பச்சமுத்து படத்திற்கு இசையமைக்கும் அனிருத்! | ‛‛எந்த விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன்'' - நடிகர் யோகி பாபு விளக்கம் | சினேகனின் குழந்தைகளுக்கு பெயர்சூட்டிய கமல்ஹாசன் |
சியாம் பிரவீன் இயக்கத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் “தி ஸ்மைல் மேன்”. சரத்குமாரின் 150வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஆழியா என்னும் குழந்தை நட்சத்திரமும் நடித்துள்ளார்.வரும் டிசம்பர் 27ம் தேதி படம் வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவை சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஆழியா, நடிகர் சரத்குமாரை பார்த்து ‛அங்கிள்' எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
அதுக்குறித்து பேசிய சரத்குமார், ‛‛நான் எப்போதும் இளமை தான்; எனக்கு வயசு ஆகவே ஆகாது. ஆழியா வளர்ந்து என்னுடைய படத்தில் ஹீரோயினியாக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை'' என்றார். அப்போது செய்தியாளர்கள் ‛சூர்யவம்சம் 2' குறித்த அப்டேட் கேட்டனர். அதற்கு பதிலளித்த சரத்குமார், ‛‛அது குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விரைவில் அறிவிப்பார்'' என்றார்.