ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டக் கூடியவர் நடிகை சமந்தா. இந்த நிலையில் ஐதராபாத்தை சார்ந்த அர்பன் கிஷான் என்ற ஷார்ட் அப் நிறுவனத்தில் தானும் முதலீடு செய்து இருக்கிறார் சமந்தா. இந்த நிறுவனம் மண்ணே இல்லாமல் காய்கறிகளை விளைவித்து வருகிறது. இங்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நீர் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை பயன்படுத்தி உணவு பொருட்களை விளைவித்து வருகிறார்கள். இப்படி தொழில்நுட்பத்தின் மூலம் காய்கறியின் உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிறுவனத்தின் மூலம் 50 வகையான காய்கறி, பழங்கள், மலர்களை பயிரிட்டு விநியோகம் செய்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் தான் நடிகை சமந்தாவும் முதலீடு செய்து இருக்கிறார். அதோடு கடந்த 2020ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.