சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டக் கூடியவர் நடிகை சமந்தா. இந்த நிலையில் ஐதராபாத்தை சார்ந்த அர்பன் கிஷான் என்ற ஷார்ட் அப் நிறுவனத்தில் தானும் முதலீடு செய்து இருக்கிறார் சமந்தா. இந்த நிறுவனம் மண்ணே இல்லாமல் காய்கறிகளை விளைவித்து வருகிறது. இங்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நீர் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை பயன்படுத்தி உணவு பொருட்களை விளைவித்து வருகிறார்கள். இப்படி தொழில்நுட்பத்தின் மூலம் காய்கறியின் உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த நிறுவனத்தின் மூலம் 50 வகையான காய்கறி, பழங்கள், மலர்களை பயிரிட்டு விநியோகம் செய்து வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் தான் நடிகை சமந்தாவும் முதலீடு செய்து இருக்கிறார். அதோடு கடந்த 2020ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் அவர் அவ்வப்போது பங்கேற்று வருகிறார்.




