வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் | சினிமா நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் ஸ்ரீகாந்த் | ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை | ரஜினி, கமல் பட இயக்குனர் யார்? இன்னும் தீராத சந்தேகம் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31ம் தேதி வெளிவந்த படம் 'அமரன்'. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம் ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று இப்படத்தின் 50வது நாள்.
இந்த வருடத்தில் ஒரு சில படங்கள்தான் 50 நாட்களைக் கடந்து ஓடியுள்ளன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் நிறைய லாபத்தைக் கொடுத்துள்ளது. அதனால், தெலுங்கிலும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் விரிவடைந்துள்ளது. இந்தப் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.
அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படம் ஆகியவை வெளியாக உள்ளன. 'அமரன்' படத்தின் வெற்றியால் இந்தப் படங்களுக்கான வியாபாரத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.