ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருபவர் சாய் பல்லவி. அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது தெலுங்கில் 'தண்டேல்', ஹிந்தியில் 'ராமாயணா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
பொதுவாக எந்தவிதமான கோபமான பதிவையும் அவருடைய சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டதில்லை. இந்நிலையில் நேற்று வெளியான செய்தி ஒன்றிற்கு கோபமான பதிவைப் பதிவிட்டுள்ளார். அதாவது, ராமாயணம் படத்தில் நடித்து வரும் சாய்பல்லவி படப்பிடிப்பு முடியும்வரை அசைவ உணவுகளை தவிர்ப்பதாகவும் இதற்காக அவர் ஹோட்டலில் கூட சாப்பிடாமல், வெளியூர்களுக்குச் செல்லும்போது கையோடு சமையல்காரர்களை அழைத்துச் செல்வதாகவும் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக கோபமாக ஒரு பதிவைப் பதிவிட்டுள்ளார்.
“அடிப்படை ஆதாரமற்ற வதந்திகள், இட்டுக்கட்டப்பட்ட பொய்கள், தவறான அறிக்கைகள் உள்நோக்கத்துடனோ, இல்லாமலோ பரப்பப்படுவதைக் காணும் போதெல்லாம் பெரும்பாலான சமயங்களில் நான் அமைதியாக இருக்கவே விரும்புவேன். ஆனால் தொடர்ந்து இவ்வாறு நடப்பதால், குறிப்பாக எனது படத்தின் வெளியீட்டின் போதோ, அறிவிப்புகள் வெளியாகும் சமயங்களிலோ இது போன்ற வதந்திகள் பரப்பப்படுவதால், அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய நேரம் இது என நினைக்கிறேன்.
அடுத்த முறை ஏதேனும் பிரபலமான பக்கமோ, ஊடகமோ, தனிநபரோ, கிசுகிசு (அ) செய்தி என்ற பெயரில் இதுபோன்ற தவறான தகவலை பரப்பினால், அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்,” எனப் பதிவு செய்துள்ளார்.