பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சாய் பல்லவி மற்றும் அவரது தங்கை இருவரும் சுற்றுலா சென்ற இடத்தில் பிகினி உடையுடன் கடற்கரையில் அமர்ந்திருப்பது, சுற்றி தருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டு சுற்றுலா என்றாலும் கூட சாய் பல்லவி இந்த மாதிரி உடை அணிவாரா என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, “இதுதான் நாங்கள் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட உண்மையான படங்கள். இது எதுவுமே ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டவை அல்ல” என்று கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பில் சாய் பல்லவி எப்போதும் அணிகின்ற கண்ணியமான உடைகளையே அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. அந்தவகையில் சாய் பல்லவி உடை சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.