2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சாய் பல்லவி மற்றும் அவரது தங்கை இருவரும் சுற்றுலா சென்ற இடத்தில் பிகினி உடையுடன் கடற்கரையில் அமர்ந்திருப்பது, சுற்றி தருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெளிநாட்டு சுற்றுலா என்றாலும் கூட சாய் பல்லவி இந்த மாதிரி உடை அணிவாரா என பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, “இதுதான் நாங்கள் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட உண்மையான படங்கள். இது எதுவுமே ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டவை அல்ல” என்று கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பில் சாய் பல்லவி எப்போதும் அணிகின்ற கண்ணியமான உடைகளையே அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. அந்தவகையில் சாய் பல்லவி உடை சர்ச்சை ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.