ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
'மாநகரம்' படத்தில் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு 'கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' போன்ற படங்களை இயக்கியவர், தற்போது ரஜினி நடிப்பில் 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்ததும் கார்த்தி நடிப்பில் 'கைதி-2' படத்தை இயக்கப் போகிறார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் கனகராஜ், ''ஒரு காலத்தில் கமல்ஹாசனை நேரில் பார்ப்பதே எனக்கு மிகப்பெரிய கனவாக இருந்து வந்தது. அப்படிப்பட்ட அவரை வைத்து ஒரு படம் இயக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன். அது விக்ரம் படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம்,'' என்று தெரிவித்தார். கூலி படத்தை அடுத்து கைதி-2 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம்-2 படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.