காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 45வது படத்தின் படப்பிடிப்பு கோயம்பத்தூரில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்ற அறிவிப்பு வெளிவந்தது.
கடந்த சில நாட்களாகவே இப்படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகுவார் என்ற தகவல் வந்து கொண்டிருந்தது. இப்படத்திலிருந்து ரஹ்மான் திடீரென விலகவில்லையாம். அவரை ஒப்பந்தம் செய்யும் போதே தனக்கு நிறைய படங்கள் இருப்பதாகவும், அதனால், இப்படத்தில் பணிபுரிய வாய்ப்பில்லை என்றே சொன்னாராம். இருப்பினும் அவரை எப்படியோ சம்மதிக்க வைத்துள்ளார்கள்.
இதனிடையே, அவருடைய திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டதால் அவர் விலகுகிறேன் என்று சொன்னதும் தயாரிப்பு நிறுவனமும் மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார்கள் என்பது தகவல். ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்களை முடித்துக் கொடுக்க மட்டுமே ஏஆர் ரஹ்மான் தற்போது முடிவெடுத்துள்ளதாகச் சொல்கிறார்கள். புதிய படங்களை தற்போதைக்கு ஏற்க அவர் விரும்பவில்லை என்கிறார்கள்.




