காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! |
சின்னத்திரையிலிருந்து சென்று வெள்ளித்திரையில் கலக்கி வரும் வாணி போஜன், சோஷியல் மீடியா ட்ரோல்களால் அதிகம் பாதிக்கப்படுவது நடிகைகள் தான் என பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவரது பேட்டியில், ''சமூக வலைதள ட்ரோல்களை விட சமூக வலைதளமே ஒரு அழுத்தத்தை கொடுக்கிறது. ஒரு படத்திலிருந்து தூக்கிவிட்டால் ஏன் உங்களை தூக்கிவிட்டார்கள் என துக்கம் விசாரிப்பது போல் கேட்பார்கள். வெளிநாடு சென்று போட்டோ போட்டால் படங்கள் இல்லை என்று சொல்வார்கள்.
நட்பு ரீதியில் நடிகருடன் படம் எடுத்தால் அதையும் ட்ரோல் செய்வார்கள். சில சமயம் முகத்தை கட் செய்துவிட்டு ஆபாசமாக பயன்படுத்துவார்கள். அதையும் மக்கள் நம்பிவிடுவார்கள். இந்த மாதிரியான ட்ரோல்களால் ஹீரோக்களை விட ஹீரோயின்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்,'' என்றார்.