சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடிக்கும் அவரது 45வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கோயம்பத்தூரில் ஆரம்பமானது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அப்படத்திலிருந்து அவர் திடீரென விலகியிருக்கிறார்.
அவருக்குப் பதிலாக சாய் அபயங்கர் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். பின்னணிப் பாடகர் திப்பு, பாடகி ஹரிணி ஆகியோரின் மகன்தான் சாய் அபயங்கர். 'கட்சி சேரா' என்ற அவரது ஆல்பம் இந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இசைத் தளங்களில் அதிகம் கேட்கப்பட்ட பாடலாக அது அமைந்துள்ளது.
ஏற்கெனவே 'பென்ஸ்' என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது சூர்யாவின் 45வது படத்திற்கும் இசையமைப்பாளராகப் பணியாற்ற உள்ளார்.
ஏஆர் ரஹ்மான் திடீரென விலகியதற்கான காரணம் என்ன என்பதை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை.