ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடித்துள்ள புஷ்பா 2 படம் டிசம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வந்தது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள சந்தியா என்ற தியேட்டரில் புஷ்பா- 2 படத்தின் சிறப்பு காட்சி பார்க்க சென்ற ரேவதி என்ற ஒரு ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார் . அவருடைய மகன் தேஜ் என்பவர் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், புஷ்பா-2 படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகை உயிரிழந்திருப்பது படக்குழுவுக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக படத்தின் கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் நாங்கள் பங்கேற்கவில்லை. ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குகிறேன். அதோடு புஷ்பா -2 பட குழுவினர் ரேவதியின் குடும்பத்திற்கு உதவி செய்ய தயாராக உள்ளார்கள். விரைவில் அவரது குடும்பத்தாரை நேரில் சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார் அல்லு அர்ஜுன்.