ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
இப்போதெல்லாம் பக்கா கமர்ஷியல் படத்தில் பாலிவுட் நடிகர்கள் வில்லனாக நடிப்பது டிரண்டாகி உள்ளது. சஞ்சய் தத், பாபி தியோல் போன்றவர்கள் இப்போதும் நடித்து வருகிறார்கள். ஆனால் 1980களிலேயே இந்த டிரண்ட் தொடங்கி விட்டது. ஜெய்சங்கர், ராதிகா நடித்த பக்கா கமர்ஷியல் படம் 'கன்னித்தீவு'. சயின்ஸ் பிக்ஷனையும், விட்டலாச்சார்யா கதையையும் கலந்து சிறிதும் லாஜிக் இல்லாத ஒரு மேஜிக்கான படத்தை இயக்கினர் டி.ஆர்.ராமண்ணா.
ஜெய்சங்கர், ராதிகாவுடன் சீமா, சி.எல்.ஆனந்தன், ஐசரி வேலன், என்னத்த கண்ணையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தனியான ஒரு மர்ம தீவில் அந்த தீவுக்கு வருகிற புதியவர்களுக்கு ஏற்படுகிற திகிலூட்டும் அனுபவம்தான் படம். இந்த படத்தில் காளி என்கிற கொடூர வில்லனாக நடித்தார் அப்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக இருந்த ரஞ்சித். எம்.பி.ஷெட்டி என்ற கன்னட நடிகரும் நடித்திருந்தார்.
புதுமையான தந்திர காட்சிகள், திகிலூட்டும் காட்சிகள், சீமாவின் கவர்ச்சியான நடிப்பு, பயங்கர சண்டை காட்சிகள் இவற்றால் படம் நல்ல வசூலை கொடுத்தபோதும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. அதிலும் குறிப்பாக 'பாலிவுட் நடிகர் ரஞ்சித்துக்கு இதெல்லாம் தேவையா' என்கிற அளவிற்கு விமர்சனங்கள் வந்தது. இதனால் இந்த ஒரு படத்துடன் மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார் ரஞ்சித்.