தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

சென்னையை சேர்ந்த அக்குபஞ்சர் வைத்தியர் சீனிவாசன். சினிமா மீதுள்ள ஆசையால் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பின்னர் 'லத்திகா' என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார். இந்த படத்தை பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாணியும், 100 ரூபாயும் கொடுத்து ஒரு தியேட்டரில் 100 நாள் ஓட வைத்தார். பின்னர் சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த அவர் அவ்வப்போது மோசடி வழக்குகளில் சிறை சென்று வந்தார். தற்போது 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த நிலையில் சீனிவாசன் நேற்று சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே அங்கு அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.