திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

சென்னையை சேர்ந்த அக்குபஞ்சர் வைத்தியர் சீனிவாசன். சினிமா மீதுள்ள ஆசையால் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பின்னர் 'லத்திகா' என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார். இந்த படத்தை பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாணியும், 100 ரூபாயும் கொடுத்து ஒரு தியேட்டரில் 100 நாள் ஓட வைத்தார். பின்னர் சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த அவர் அவ்வப்போது மோசடி வழக்குகளில் சிறை சென்று வந்தார். தற்போது 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த நிலையில் சீனிவாசன் நேற்று சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே அங்கு அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.




