நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு 13 வயது ஆரத்யா பச்சன் என்கிற பெண் குழந்தை இருக்கிறது. சமீப வருடங்களாகவே ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் இவர்கள் இருவரும் விவகாரத்து பெற்று பிரியப் போகிறார்கள் என்றும் அவ்வபோது செய்திகள் அடிபடுவதும் பிறகு இருவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.
இந்த நிலையில், 'பிலிம்பேர் ஓடிடி விருதுகள்-2024' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபிஷேக் பச்சன், திருமணமான ஆண்களுக்கு ஒரு அறிவுரையையும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர், ''படங்களில் நடிக்கும்போது இயக்குனரின் பேச்சைக் கேட்பது போல் வீட்டில் மனைவியின் பேச்சையும் கேட்பீர்களா?'' என வேடிக்கையாக கேட்டார்.
இதற்கு அபிஷேக்கும் வேடிக்கையான முறையில் பதிலளித்தார். "ஆம், திருமணமான எல்லா ஆண்களும் இதையே செய்ய வேண்டும். உங்க மனைவி சொல்றதைக் கேளுங்க" என்றார். விவாகரத்து பற்றிய வதந்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும் சூழலில் அபிஷேக் பச்சனின் இந்த பேச்சு வைரலாகியுள்ளது.




