மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு 13 வயது ஆரத்யா பச்சன் என்கிற பெண் குழந்தை இருக்கிறது. சமீப வருடங்களாகவே ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் இவர்கள் இருவரும் விவகாரத்து பெற்று பிரியப் போகிறார்கள் என்றும் அவ்வபோது செய்திகள் அடிபடுவதும் பிறகு இருவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.
இந்த நிலையில், 'பிலிம்பேர் ஓடிடி விருதுகள்-2024' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபிஷேக் பச்சன், திருமணமான ஆண்களுக்கு ஒரு அறிவுரையையும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர், ''படங்களில் நடிக்கும்போது இயக்குனரின் பேச்சைக் கேட்பது போல் வீட்டில் மனைவியின் பேச்சையும் கேட்பீர்களா?'' என வேடிக்கையாக கேட்டார்.
இதற்கு அபிஷேக்கும் வேடிக்கையான முறையில் பதிலளித்தார். "ஆம், திருமணமான எல்லா ஆண்களும் இதையே செய்ய வேண்டும். உங்க மனைவி சொல்றதைக் கேளுங்க" என்றார். விவாகரத்து பற்றிய வதந்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும் சூழலில் அபிஷேக் பச்சனின் இந்த பேச்சு வைரலாகியுள்ளது.