விஜய்சேதுபதி, மணிகண்டன் கூட்டணியில் முத்து என்கிற காட்டான் : டீசர் வெளியீடு | ரோபோ சங்கர் இறுதி சடங்கு : உருக்கமாக பேசிய விமல் | நடிகை பலாத்கார வழக்கு : திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு | பிளாஷ்பேக்: ஆஸ்தான இயக்குனருக்காக கவுரவ தோற்றத்தில் நடித்த சிவாஜி | அரசியல் படத்தில் அபர்ணதி | ஒரே நேரத்தில் தயாராகும் 2 ஐயப்பன் படங்கள் | 'கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் | இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை |

மேஜர் சுந்தர்ராஜன் என்றாலே ஆங்கிலம் கலந்து பேசும் அந்த கண்டிப்பான அப்பா கேரக்டர்கள்தான் நினைவுக்கு வரும். சிவாஜியின் நெருங்கிய நண்பரான இவர் சிவாஜியை போன்று நாடகத்தில் இருந்து வந்தவர். ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஓய்.ஜி.பார்த்தசாரதியின் நாடக கம்பெனியில் கம்பெனி நடிகராக இருந்தார். தொலைபேசி துறையிலும் பணியாற்றினார். அவர் நடித்து வந்த 'சர்வர் சுந்தரம்' நாடகத்தை பே.பாலச்சந்தர் திரைப்படமாக்கியபோது அதில் அவர் நடித்த தந்தை கேரக்டரை சினிமாவிலும் நடித்தார்.
அதன் பிறகு அவர் 90 சதவிகித படங்களில் தந்தை கேரக்டரில்தான் நடித்தார். ஆனால் அவர் சில படங்களை இயக்கினார் என்பது பலருக்கு தெரியாது. சிவாஜி நடித்த 'கல்தூண்' படத்தின் மூலம் இயக்குனரானார். 'கல்தூண்' என்ற நாடகத்தையே திரைப்படமாக இயக்கினார். சிவாஜி, கே.ஆர்.விஜயா, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், திலக் ஆகியோருடன் மேஜர் சுந்தர்ராஜனும் நடித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதன் பிறகு ஊரும் உறவும், நெஞ்சங்கள், இன்று நீ நாளை நான் படங்களை இயக்கினார். கடைசியாக கமல் நடித்த 'அந்த ஒரு நிமிடம்' படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் இயக்கவில்லை.