பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
மேஜர் சுந்தர்ராஜன் என்றாலே ஆங்கிலம் கலந்து பேசும் அந்த கண்டிப்பான அப்பா கேரக்டர்கள்தான் நினைவுக்கு வரும். சிவாஜியின் நெருங்கிய நண்பரான இவர் சிவாஜியை போன்று நாடகத்தில் இருந்து வந்தவர். ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஓய்.ஜி.பார்த்தசாரதியின் நாடக கம்பெனியில் கம்பெனி நடிகராக இருந்தார். தொலைபேசி துறையிலும் பணியாற்றினார். அவர் நடித்து வந்த 'சர்வர் சுந்தரம்' நாடகத்தை பே.பாலச்சந்தர் திரைப்படமாக்கியபோது அதில் அவர் நடித்த தந்தை கேரக்டரை சினிமாவிலும் நடித்தார்.
அதன் பிறகு அவர் 90 சதவிகித படங்களில் தந்தை கேரக்டரில்தான் நடித்தார். ஆனால் அவர் சில படங்களை இயக்கினார் என்பது பலருக்கு தெரியாது. சிவாஜி நடித்த 'கல்தூண்' படத்தின் மூலம் இயக்குனரானார். 'கல்தூண்' என்ற நாடகத்தையே திரைப்படமாக இயக்கினார். சிவாஜி, கே.ஆர்.விஜயா, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், திலக் ஆகியோருடன் மேஜர் சுந்தர்ராஜனும் நடித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதன் பிறகு ஊரும் உறவும், நெஞ்சங்கள், இன்று நீ நாளை நான் படங்களை இயக்கினார். கடைசியாக கமல் நடித்த 'அந்த ஒரு நிமிடம்' படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் இயக்கவில்லை.