இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
மேஜர் சுந்தர்ராஜன் என்றாலே ஆங்கிலம் கலந்து பேசும் அந்த கண்டிப்பான அப்பா கேரக்டர்கள்தான் நினைவுக்கு வரும். சிவாஜியின் நெருங்கிய நண்பரான இவர் சிவாஜியை போன்று நாடகத்தில் இருந்து வந்தவர். ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தை ஓய்.ஜி.பார்த்தசாரதியின் நாடக கம்பெனியில் கம்பெனி நடிகராக இருந்தார். தொலைபேசி துறையிலும் பணியாற்றினார். அவர் நடித்து வந்த 'சர்வர் சுந்தரம்' நாடகத்தை பே.பாலச்சந்தர் திரைப்படமாக்கியபோது அதில் அவர் நடித்த தந்தை கேரக்டரை சினிமாவிலும் நடித்தார்.
அதன் பிறகு அவர் 90 சதவிகித படங்களில் தந்தை கேரக்டரில்தான் நடித்தார். ஆனால் அவர் சில படங்களை இயக்கினார் என்பது பலருக்கு தெரியாது. சிவாஜி நடித்த 'கல்தூண்' படத்தின் மூலம் இயக்குனரானார். 'கல்தூண்' என்ற நாடகத்தையே திரைப்படமாக இயக்கினார். சிவாஜி, கே.ஆர்.விஜயா, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், திலக் ஆகியோருடன் மேஜர் சுந்தர்ராஜனும் நடித்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அதன் பிறகு ஊரும் உறவும், நெஞ்சங்கள், இன்று நீ நாளை நான் படங்களை இயக்கினார். கடைசியாக கமல் நடித்த 'அந்த ஒரு நிமிடம்' படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் இயக்கவில்லை.