25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் நடிகர் விஜய். அவருக்கு அடுத்ததாக சம்பளம் வாங்குகிறார். அதே சமயம் அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட தயாராகிவிட்ட விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படம் தான் சினிமாவில் தனது கடைசி படம் என்றும் கூறிவிட்டார்.
இந்த நிலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தந்தையை போல நடிப்பில் இறங்காமல் தனது தாத்தாவைப் போல டைரக்ஷன் துறையில் அடி எடுத்து வைத்துள்ளார். லைகா நிறுவனத்தில் தனது முதல் படத்தை அவர் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அவரது முதல் பட ஹீரோவாக சந்தீப் கிஷன் இடம் பிடித்துள்ளார். ரசிகர்கள் பலரும் ஜேசன் சஞ்சய்க்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் ரசிகர்கள் பலரும் திரையுலகை சேர்ந்தவர்களும் கூட ஒரு விஷயத்தை வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அதாவது விஜய் சினிமாவில் அறிமுகமான சிறு வயது கதாபாத்திரம் என்றாலும் சரி, ஹீரோவாக என்றாலும் சரி, அவரது தந்தையின் டைரக்ஷனில் தான்.. அப்படிப்பட்டவர் தற்போது தனது மகன் இயக்குனராக அறிமுகமாகும் நிலையில் அவரது டைரக்ஷனில் தனது கடைசி படத்தை நடித்திருந்தால் உலக சினிமாவிலேயே தந்தையின் டைரக்ஷனில் திரையுலக பயணத்தை துவங்கி மகன் டைரக்ஷனில் தனது பயணத்தை முடித்து இது போன்ற சாதனையை செய்த ஒரே நடிகர் என்கிற பெயரை பெற்றிருக்கலாம். அதை தவற விட்டு விட்டாரே என்று வருத்ததுடன் கூறுகிறார்கள். ஆனால் விஜய்க்கு இப்படி ஒரு விஷயம் தோன்றி இருக்குமா?