Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: அமரர் எம் ஜி ஆரின் அமரத்துவம் பெற்ற “அடிமைப் பெண்” திரைப்படப் பின்னணி

01 டிச, 2024 - 11:29 IST
எழுத்தின் அளவு:
Flashback:-The-background-of-the-immortal-MGRs-film-"Adimai-Penn"


மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மகத்தான கலைப் படைப்புகளில் ஒன்றாக, இன்றும் ரசிகர்களால் ஆராதிக்கப்படும் அமரத்துவம் வாய்ந்த அற்புத கலைப் பெட்டகமாக உருவான “அடிமைப் பெண்” திரைப்படத்தின் சில அறிந்திராத பக்கங்களைத்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம். இயக்குநர் கே சங்கர் இயக்கிய திரைப்படங்களிலேயே மிகவும் சிறப்புக்குரிய திரைப்படமாக பார்க்கப்படும் இந்த “அடிமைப் பெண்” திரைப்படத்தை பாராட்டாத திரை ஆர்வலர்களும் இல்லை, திரை வல்லுனர்களும் இல்லை. 1969ல் வெளிவந்து, 25 வாரங்கள் ஓடி மாபெரும் வசூலை அள்ளித் தந்த இத்திரைக் காவியத்தை “எம் ஜி ஆர் பிக்சர்ஸ்” சார்பில் எம் ஜி ஆரே தயாரித்து, மாறுபட்ட இரட்டை வேடங்களில் நடித்தும் இருந்தார்.

இயக்குநர் கே சங்கரின் இயக்கத்தில் 1967க்கு முன்பே இந்த “அடிமைப் பெண்” திரைப்படத்தின் உருவாக்கம் ஆரம்பமாகியிருந்தது. அதில் சரோஜாதேவி, கே ஆர் விஜயா மற்றும் ஜெயலலிதா என மூன்று நாயகியர் நடித்துமிருந்தனர். இதனை உறுதி செய்யும் பொருட்டாக, 1966ம் ஆண்டு எம் ஜி ஆர் மற்றும் சரோஜாதேவி நடிப்பில் ஆர் எம் வீரப்பன் தயாரித்து “சத்யா மூவீஸ்” சார்பில் வெளிவந்த “நான் ஆணையிட்டால்” என்ற திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியான “நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்” என்ற பாடலின் இடையே “நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்” என்று எம் ஜி ஆர் பாடுவது போல் வரும் காட்சியில் “அடிமைப் பெண்” என்ற விளம்பரம் பளிச்சிடுவதாக காட்டியிருப்பர்.

அதன் பின் எம் ஜி ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு, குணமாகி மீண்டும் நடிக்க வந்து, படப்பிடிப்பைத் தொடங்கிய போது சரோஜாதேவி மற்றும் கே ஆர் விஜயா ஆகிய இருவரும் இல்லாமல் ஜெயலலிதாவிற்கு மட்டும் இரட்டை வேடம் தரப்பட்டிருந்தது. நாயகி, வில்லி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஜெயலலிதா. கே ஆர் விஜயா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை ராஜஸ்ரீயை நடிக்க வைத்திருந்தனர். பிரமாண்டமான அரங்க அமைப்புகள் அமைத்து அதுவரை படமாக்கப்பட்டிருந்த பழைய “அடிமைப் பெண்” படத்தின் படச்சுரளையும் துணிந்து தூக்கி எறிந்திருந்தார் எம் ஜி ஆர். மீண்டும் புதிய வடிவில் உருவாக்கம் செய்யப்பட்ட “அடிமைப் பெண்” திரைப்படம் 1969ம் ஆண்டு மே 1 அன்று தமிழகமெங்கும் திரையிடப்பட்டு ஒரு வெள்ளிவிழா திரைப்படமாக மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு. மேலும் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் முதல் பரிசினையும் வென்றெடுத்தது இந்த “அடிமைப் பெண்”.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜேசன் சஞ்சய்க்கும் சந்தீப் கிஷன் ராசி ஒர்க் அவுட் ஆகுமா ?ஜேசன் சஞ்சய்க்கும் சந்தீப் கிஷன் ... 15 நாட்கள் படமாக்கப்படும் ஹிருத்திக் ரோஷன்-ஜூனியர் என்டிஆர் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி 15 நாட்கள் படமாக்கப்படும் ஹிருத்திக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in