டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

சின்னத்திரை நடிகையான வைஷ்ணவி அருள்மொழி பல சீரியல்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன்பிறகு பேரன்பு சீரியலின் மூலம் ஹீரோயின் ஆன வைஷ்ணவியின் மார்க்கெட் தற்போது டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு விருது நிகழ்வில் பேசியபோது, தாயை போல வந்த தோழர் ஒருவர் தற்போது தன்னை தவறாக புரிந்து கொண்டு விலகிச் செல்வதாக வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார். இதனையடுத்து பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அதேசமயம் வைஷ்ணவி மற்றும் அந்த நண்பரை பற்றி தெரிந்த சக ஆர்ட்டிஸ்ட்டுகள் கூறுகையில், அந்த பையன் மிகவும் அக்கறையோடு இருந்ததாகவும் வைஷ்ணவியின் குணம் தான் தற்போது மாறிவிட்டது என்றும் கூறியுள்ளனர்.