கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் மஹாராஷ்டிரா மற்றும் மேற்குவங்க கலைகள், சினிமாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரு மாநிலங்களை சேர்ந்த இயக்குனர்கள் தமிழ் படங்களை இயக்கினார்கள். இப்படியான காலகட்டத்தில் மஹாராஷ்டிர மாநிலத்தின் புகழ்பெற்ற நாட்டுப்புற கதையான 'சாந்த சக்குபாய்' தமிழில் திரைப்படமாக உருவானது. இந்த கதை அங்கு தெருக்கூத்தாகவும், கதா காலேட்சபமாவும் சொல்லப்பட்டு வந்தது.
இது ஒரு கிருஷ்ண பக்தையின் கதை. சக்குபாய் தீவிர கிருஷ்ணபக்தை. அவருக்கு சரியான மூளை வளர்ச்சி குறைபாடுள்ள முறை மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்கிறார்கள். அவளுக்கு கொடுமையான அத்தை அமைகிறார். அந்த வீட்டில் உள்ள இன்னொருவன் சக்குபாயை அடைய திட்டமிடுகிறான். இந்த நிலையில் சக்குபாய் இந்த துன்பங்களில் இருந்து விடுபட்டு கிருஷ்ணனிடமே தஞ்சமடைய புனித யாத்திரையை மேற்கொள்கிறார்.
தனது பக்தையை துன்புறுத்துகிறவர்களுக்கு பாடம் புகட்ட கிருஷ்ண பரமாத்மா சக்குபாயின் உருவம் தரித்து அந்த வீட்டுக்கு செல்கிறார். அப்பாவியான சக்குபாய் என நினைத்து மாமியார் கொடுமை செய்ய அதற்கு கிருஷ்ணர் கொடுக்கும் பதிலடிதான் கதை. இதற்கிடையில் யாத்திரை சென்ற சக்குபாய் இறந்து விட கிருஷ்ணருக்கு சிக்கல் ஏற்படுகிறது. சக்குபாய் வேடத்தில் இருந்து அவரால் வெளிவர முடியாது. எனவே கிருஷ்ணரை காப்பாற்ற ருக்மணி வருகிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
இந்த படத்தை சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கினார். சோமயராஜூலுவும், கொத்தமங்கலம் சுப்புவும் திரைக்கதையை எழுதினர், துறையூர் ராஜகோபால சர்மா இசை அமைத்திருந்தார். சக்குபாயாக அஸ்வத்தமாவும், கொடுமைக்கார மாமியாராக பனி பாயும், கணபதி பட் கிருஷ்ணராகவும், ராஜமணி ருக்மணியாகவும், சாரங்கபாணி சக்குபாயின் கணவராகவும் நடித்திருந்தார்கள். படம் பெரிய வெற்றி பெற்றது.