30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ் | தனி இடத்தை பிடிப்பதற்காக சவால்களை எதிர்கொள்கிறேன் : பிந்து மாதவி | கோவையில் அடுத்தடுத்த நாள் இசை நிகழ்ச்சி நடத்தும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி | ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு |
தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஒரே இரவில் எழுதிய கதைதான் 'ஓர் இரவு' என்ற பெயரில் திரைப்படம் ஆனது. அதேபோல கே.பாக்யராஜ் ஒரே இரவில் எழுதிய கதைதான் 'இன்று போய் நாளை வா'. ஒரே பெண்ணை காதலிக்கும் 3 நண்பர்களின் கதை. அந்த பெண்ணின் மனதை வெல்வது யார்? எப்படி என்பதுதான் திரைக்கதை. மூவரில் ஒருவர், பணக்காரர், கல்லூரி மாணவர். இன்னொருவர் ஏழ்மையானவர், வேலைக்குச் செல்பவர். அடுத்தவர், நடுத்தர வர்க்கம், வேலைக்குச் செல்லாமல் பொழுதைக் கழிப்பவர். 1980களின் இளைஞர்களின் காதல் கலாட்டாவை யதார்த்தமாக பிரதிபலித்த படம். காமெடி, சென்டிமென்ட் கலந்த காதல் கதை. அதோடு ஹிந்தி திணிப்பு, வர்க முரண்பாடுகளையும் சொன்ன படம்.
இந்த படத்தில் கே.பாக்யராஜோடு அவரது நிஜமான நண்பர்கள் பழனிச்சாமி, ராம்லி நடித்தார்கள், ராதிகாதான் ஹீரோயின். ராதிகாவின் அப்பா வி.எம்.ஜான். அம்மா காந்திமதி. தாத்தா கல்லாபெட்டி சிங்காரம். ரவுடியாக சூர்யகாந்த். உடன் கைத்தடியாக செந்தில். இந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டே முழு கதையும் சொல்வார் கே.பாக்யராஜ். இன்றைக்கு பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் படம்.