ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தற்போது தமிழில் தக்லைப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் திரிஷா. மேலும் சமீபகாலமாக படப்பிடிப்பு இல்லை என்றால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் திரிஷா, சமீபத்தில் தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானுக்கு சென்று இருப்பதாக அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் திரிஷா. அந்த பதிவில், 'நம்மை மனமுடைய செய்தவரிடத்தில் நெருங்கிய நட்புடன் பழகும் ஒருவருடன் நாம் பழகக் கூடாது' என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் திரிஷா. யாரை இப்படி அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. என்றாலும், ஏதோ சொந்த வாழ்க்கையில் தான் பாதிக்கப்பட்ட விஷயத்தைதான் அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்பது தெரிகிறது.




