கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தற்போது தமிழில் தக்லைப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் தெலுங்கு, மலையாளத்திலும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் திரிஷா. மேலும் சமீபகாலமாக படப்பிடிப்பு இல்லை என்றால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் திரிஷா, சமீபத்தில் தான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஜப்பானுக்கு சென்று இருப்பதாக அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் திரிஷா. அந்த பதிவில், 'நம்மை மனமுடைய செய்தவரிடத்தில் நெருங்கிய நட்புடன் பழகும் ஒருவருடன் நாம் பழகக் கூடாது' என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார் திரிஷா. யாரை இப்படி அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது தெரியவில்லை. என்றாலும், ஏதோ சொந்த வாழ்க்கையில் தான் பாதிக்கப்பட்ட விஷயத்தைதான் அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்பது தெரிகிறது.