ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா 2' படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் சென்னை புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆனால், பின்னணி இசையை அவர் அமைக்கவில்லை. அவருக்குப் பதிலாக வேறு சில இசையமைப்பாளர்கள் அமைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதுவரையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியான சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசினார்.
“ரவி சார், நான் சரியான நேரத்தில் பாடல்களைத் தரவில்லை, பின்னணி இசையைத் தரவில்லை என என் மீது குற்றம் சுமத்தினீர்கள். நீங்கள் என் மீது அன்பு செலுத்துபவர். எங்கு அன்பு உள்ளதோ அங்கு குற்றச்சாட்டுக்களும் இருக்கும். ஆனால், என் மீதான அன்பை விட உங்கள் குற்றச்சாட்டுக்கள்தான் அதிகமாக உள்ளது. “தவறான நேரம், நான் லேட்' என நீங்கள் கூறுகிறீர்கள். நான் என்ன செய்ய முடியும். இப்போது கூட 25 நிமிடங்களுக்கு முன்பே வந்துவிட்டேன். ஆனால், குறிப்பிட்ட சமயத்தில்தான் நான் கேமரா என்ட்ரி தர வேண்டும் என என்னை அனுமதிக்கவில்லை.
மேடை மீது இவற்றை டிஸ்கஸ் செய்யத் தேவையில்லை. நான் மேடையில் பேசினால் அது என்னைத்தான் தாக்கும். இருந்தாலும் நான் ஓபனாக இருக்க விரும்புகிறேன்,” என வெளிப்படையாகப் பேசினார்.
புஷ்பா 2 பின்னணி இசை சர்ச்சையால் தேவி ஸ்ரீ பிரசாத் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும் நேற்று அவர் மேடையில் வெளிப்படையாகப் பேசியிருப்பதும் இப்போது சர்ச்சையாகி உள்ளது.