Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி இதையெல்லாம் விட்டுடலாமே : ஜானகி அம்மாவிடம் வருத்தப்பட்ட எம்ஜிஆர்

25 நவ, 2024 - 10:35 IST
எழுத்தின் அளவு:
Rajini-should-leave-all-this-behind:-MGR-upset-with-Janaki-Amma

மக்கள் திலகம் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாவின் நூற்றாண்டு விழா அதிமுகவினரால் நேற்று இரவு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் நேரில் கலந்து கொள்ள முடியாத நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோ மூலமாக ஜானகி அம்மையாருடனான தனது சந்திப்பு, அனுபவங்கள் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, “ஜானகி அம்மாவை மூன்று முறை சந்தித்துள்ளேன். எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மாவும் அரசியலில் இருந்து ஒதுங்கிய ஒரு காலகட்டத்தில் ராமாவரம் எம்ஜிஆர் வீட்டின் அருகே அருகே படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது ஜானகி அம்மா என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்கள். நானும் நேரில் சென்று அவரை சந்தித்தேன். அப்போது அவர் கையாலேயே எனக்கு காபி போட்டு கொடுத்தார். ராகவேந்திரா படம் வெளியான போது அதை எம்ஜிஆர் பார்த்து விட்டு 15 நிமிடம் உங்களைப் பற்றியே ரசித்து பேசிக் கொண்டிருந்தார் என்றும் கூறினார்.

ரஜினி எப்படி இவ்வளவு சாந்தமாக, அமைதியாக, அழகாக நடித்திருக்கிறார். பார்க்கவே நன்றாக இருக்கிறது. ஆனால் பல படங்களில் சிகரெட் பிடிக்கும் விதமாக நடிக்கிறார். அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களும் அதை பார்த்து அந்த பழக்கத்தை தொடர்கிறார்களே.. இதை ரஜினி விட்டுவிட்டால் நன்றாக இருக்கும். நானும் நேரம் கிடைக்கும்போது அவரிடம் சொல்ல முயற்சிக்கிறேன் என்று எம்ஜிஆர் தன்னிடம் அந்த சமயத்தில் கூறியதாக ஜானகி அம்மா என்னிடம் கூறினார்” என்று இந்த வீடியோவில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

எம்ஜிஆர், ரஜினி இருவருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக பலர் வதந்திகளை பரப்பி வந்த நிலையில் ரஜினி மீது எம்ஜிஆர் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார் என்பது ஜானகி அம்மா மூலமாக ரஜினி தெரிந்து கொண்ட இந்த நிகழ்வின் மூலமும் ரஜினி அதை வெளிப்படையாக சொன்னதன் மூலமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அரசியலுக்கு வந்திருந்தால் எல்லாவற்றையும் இழந்திருப்பேன்
மேலும் ரஜினி கூறுகையில், 'நான் 2017ல் அரசியலுக்கு வருவேன்' என்று சொன்னேன். அப்போது நிறைய பேர் என்னை சந்தித்து ஆலோசனை சொல்ல வந்தார்கள். அந்த ஆலோசனைகளை கேட்டிருந்தால் அவ்வளவுதான் எல்லாவற்றையும் இழந்து, நிம்மதியையும் இழந்திருப்பேன்.

ஜானகி அம்மாள் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அவரே முடிவு எடுத்து ஜெயலலிதாவை அழைத்து இந்த அரசியல் எனக்கு சரிபட்டு வராது. அதற்கு நீங்கள்தான் சரி. உங்களிடம் திறமை, தைரியம், பக்குவம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியை இன்னும் முன்னுக்கு கொண்டு வருவதற்கு உங்களால்தான் முடியும். அது என்னால் முடியாது. எங்கே கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டு கையெழுத்து போட்டார்.

'இரட்டை இலை' சின்னத்தை மீட்டு ஜெயலலிதாவிடம் ஒப்படைத்து, அரசியலில் இருந்து ஒதுங்கி கொண்டார். இது எவ்வளவு பெரிய குணம். அவருக்கு விமரிசையாக நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புஷ்பா 2 சர்ச்சை : வெளிப்படையாகப் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத்புஷ்பா 2 சர்ச்சை : வெளிப்படையாகப் ... இந்த விஷயம் இருந்தால் மட்டும் கதை சொல்லுங்க : மிஸ் யூ இயக்குனரிடம் ஜிப்ரான் போட்ட கண்டிஷன் இந்த விஷயம் இருந்தால் மட்டும் கதை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30 நவ, 2024 - 04:11 Report Abuse
J.V. Iyer "அவர்கள் குடும்பம்" என்றால் முதல் நாளே வந்து ஆஜராகிவிடுவார் நம் சூப்பர் ஸ்டார். நடித்த படங்கள் எல்லா தியேட்டர்களிலும் ஓடவேண்டும் அல்லவா? எல்லாம் பணம், பணம். பயம், பயம். ஆனால் ரசிகர்கள் இவர் நடித்தபடங்களை பார்க்காமல் ஓடுகிறார்கள்? என்ன செய்வது?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS,யூ.எஸ்.ஏ
28 நவ, 2024 - 03:11 Report Abuse
RAMAKRISHNAN NATESAN இந்த திரைக்கதை நல்லா இருக்குதுங்கோ .... ஆனா லதாவை முன்னிட்டு மக்கள் திலகத்துக்கும், சூப்பரு ஸ்டாருக்கும் என்ன பிரச்னை இருந்துச்சு ன்னு இந்தத் தலைமுறைக்கும் தெரியுமுங்க .... சரக்கடிச்சுட்டு சூப்பரு விமான நிலையத்தில் பண்ணின ரவுசும் கேள்விப்பட்டோம் .... சூப்பர மக்கள் திலகம் திக்குமுக்காட வெச்சதையும் அரசல் புரசலா கேள்விப்பட்டோமுங்க ....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in