விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
மதுரை பகுதியில் இப்போதும் தெருக்கூத்தாக, வில்லுப்பாட்டாக சொல்லப்படும் நாட்டுப்புற கதைதான் 'மதுரை வீரன்'. தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு இளைஞன் தன் வீரத்தால் பாண்டிய நாட்டு இளவரசியை காதலித்து அந்த நாட்டின் தளபதியாகி பின்பு அரச குடும்பத்தால் மாறுகால் மாறுகை பலிவாங்கப்பட்டு மறைந்த இளைஞன். இன்னும் பல குடும்பங்களுக்கு மதுரை வீரன் குலசாமி. கிராமங்களில் மதுரை வீரனுக்கு கோவிலும், சிலைகளும் உள்ளது.
இந்த கதையில்தான் 1956ம் ஆண்டு எம்ஜிஆர் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. கடைசி காட்சியில் எம்.ஜி.ஆர் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டு கிடக்கும் காட்சியை காண முடியாமல் பெண்கள் கதறி அழுத வண்ணம் வெளியே வந்ததும், பல தியேட்டர்களில் அந்த காட்சிகள் காட்டப்படாததும் வரலாறு.
ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரனுக்கு முன்பே இந்த கதை 1939ம் ஆண்டே வெளிவந்துள்ளது. இதில் மதுரை வீரனாக வி.ஏ.செல்லப்பா நடித்தார். அவரது காதலியாக டி.பி.ராஜலட்சுமி நடித்தார். எம்.எம்.சிதம்பர நாதன், பி.ஆர்.மங்களம் உள்ளிட்ட பலர் நடித்தார்கள், ராஜு பிலிம்ஸ், ராஜம் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது. படத்தின் பாடல்களை டி.பி.ராஜலட்சுமியே எழுதி செல்லப்பாவுடன் இணைந்து பாடி இருந்தார்.
இந்த படத்தின் பிரதிகள் இப்போது இல்லை. மதுரை பகுதியில் மதுரை வீரன் என்ற பெயரில் பல நாட்டுப்புற கதைகள் உள்ளது. வி.ஏ.செல்லப்பா நடித்த மதுரை வீரன் கதை வேறு, எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் கதை வேறு என்று கருத்தும் உள்ளது.