இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
சூர்யா நடித்த 'கங்குவா' படம் நேற்று முன்தினம் வெளியானது. கடும் விமர்சனங்களை எதிர் கொண்டு பான் இந்தியா படமாக ஓடி வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரது 44வது படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. அதற்கான படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குவது பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஆர்ஜே பாலாஜி முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். ஸ்கிரிப்ட் புத்தகத்தின் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, “நடந்து கொண்டிருக்கிறது… நாங்கள் நம்புகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'கங்குவா' குறித்த விமர்சனங்கள் வெளிவந்த ஒரு நாளில் ஆர்ஜே பாலாஜி இப்படி பதிவிட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. 'கங்குவா' போன்ற விமர்சனங்கள் பெரும் அளவில் எழாதபடி சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் இருக்க வேண்டும் என்ற ஒரு பயம் அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு இருக்கத்தானே செய்யும்.