‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

முன்னணி மலையாள நடிகையான மஞ்சு வாரியர் தற்போது தனது ரீ எண்ட்ரியில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மோகன்லாலுடன் 'ஓடியன்' என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவதூறு பரப்பி வருவதாகவும் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீகுமார் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். ஸ்ரீகுமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலையானார்.
இந்த வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் மஞ்சு வாரியர் கோர்ட்டில் ஆஜராகி தனது குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. இதனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதை தொடர்ந்து ஸ்ரீகுமார், மஞ்சு வாரியர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வார் என்று தெரிகிறது.