300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என அவரது கடந்த சில படங்களின் தயாரிப்பின் போது பேசப்பட்டது. விஜய்யின் கடைசி படமாக தயாராக உள்ள அவரது 69வது படத்திற்காக பெறப்போகும் சம்பளம் 275 கோடி என யாரோ சிலர் கிளப்பிவிட்டார்கள். அது உண்மையா பொய்யா என்பது கடைசி வரையில் வெளிவராது. அவ்வளவு சம்பளம் அவர் வாங்குகிறார் என்றால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரையும் பெற முடியும். இதற்கு முன்பு ஷாரூக்கான்தான் 250 கோடி ரூபாய் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் என்று சொன்னார்கள்.
தற்போது விஜய்யின் 275 கோடி சம்பளத்தை தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் முறியடித்துவிட்டார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகி உள்ளது. 'புஷ்பா 2' படத்திற்காக அவரது சம்பளம் 300 கோடி என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்காக அவர் கடந்த மூன்று வருடங்களாக வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அப்படி நடித்திருந்தால் வருடத்திற்கு ஒரு படம் என்றால் கூட 300 கோடியை சம்பாதித்திருக்கலாம்.
ஆனால், 'புஷ்பா 2' படத்திற்காக அவர் மொத்த வசூலில் 30 சதவீதம் வரை பங்கு கேட்டுள்ளார் என்றும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. உதாரணத்திற்கு 1000 கோடி வசூலிக்கிறது என்றால் அவரது சம்பளம் 300 கோடி என்று கேட்பாராம். அவரைப் போலவே படத்தின் இயக்குனரும் குறிப்பிட்ட சதவீதம் பங்கு கேட்டுள்ளதாகத் தகவல்.
'புஷ்பா 2' வியாபாரம் 1000 கோடிக்கும் அதிகமாக நடந்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி உள்ளது. அதனால், 2000 கோடி வரை வசூலை எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்கள். வசூல் அதிகமாக அதிகமாக அல்லு அர்ஜுனின் சம்பளமும் அதிகமாகும். அது எத்தனை கோடிக்குப் போய் நிற்கும் என்பது வசூல் முடிந்த பிறகுதான் தெரிய வரும்.