என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தென்னிந்தியத் திரையுலகத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என அவரது கடந்த சில படங்களின் தயாரிப்பின் போது பேசப்பட்டது. விஜய்யின் கடைசி படமாக தயாராக உள்ள அவரது 69வது படத்திற்காக பெறப்போகும் சம்பளம் 275 கோடி என யாரோ சிலர் கிளப்பிவிட்டார்கள். அது உண்மையா பொய்யா என்பது கடைசி வரையில் வெளிவராது. அவ்வளவு சம்பளம் அவர் வாங்குகிறார் என்றால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயரையும் பெற முடியும். இதற்கு முன்பு ஷாரூக்கான்தான் 250 கோடி ரூபாய் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் என்று சொன்னார்கள்.
தற்போது விஜய்யின் 275 கோடி சம்பளத்தை தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் முறியடித்துவிட்டார் என்ற தகவல் டோலிவுட்டில் வெளியாகி உள்ளது. 'புஷ்பா 2' படத்திற்காக அவரது சம்பளம் 300 கோடி என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்திற்காக அவர் கடந்த மூன்று வருடங்களாக வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அப்படி நடித்திருந்தால் வருடத்திற்கு ஒரு படம் என்றால் கூட 300 கோடியை சம்பாதித்திருக்கலாம்.
ஆனால், 'புஷ்பா 2' படத்திற்காக அவர் மொத்த வசூலில் 30 சதவீதம் வரை பங்கு கேட்டுள்ளார் என்றும் மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது. உதாரணத்திற்கு 1000 கோடி வசூலிக்கிறது என்றால் அவரது சம்பளம் 300 கோடி என்று கேட்பாராம். அவரைப் போலவே படத்தின் இயக்குனரும் குறிப்பிட்ட சதவீதம் பங்கு கேட்டுள்ளதாகத் தகவல்.
'புஷ்பா 2' வியாபாரம் 1000 கோடிக்கும் அதிகமாக நடந்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி உள்ளது. அதனால், 2000 கோடி வரை வசூலை எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார்கள். வசூல் அதிகமாக அதிகமாக அல்லு அர்ஜுனின் சம்பளமும் அதிகமாகும். அது எத்தனை கோடிக்குப் போய் நிற்கும் என்பது வசூல் முடிந்த பிறகுதான் தெரிய வரும்.