தமிழுக்கு வருகிறார் ஜான்வி கபூர் | புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் |
ராம்கோபால் வர்மா தயாரித்துள்ள படம் 'சாரி'. தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வருகிற டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை கிரி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இதில் ஆராத்யா சோலோ நாயகியாக நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் பேட் பாய்ஸ், ராஸ்தா, காக்கிபடா, தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் பான் இந்தியா நாயகி ஆகிறார். சத்யா யாது அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் கிரி கிருஷ்ணா கூறும்போது “இன்ஸ்டாகிராமில் உள்ள பிரபலமான பெண்களின் சூழ்நிலை மற்றும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளையும் பேசும் படமாக பல திரில்லர் தருணங்களுடன் 'சாரி' இருக்கும். படத்தின் அடிப்படை கரு அதிகப்படியான காதல் பயமுறுத்தும் என்பதுதான். சமூக ஊடகங்களில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்கள் சமூகத்திலும் தனிப்பட்ட ஒருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றங்களை இந்தப் படம் பேசுகிறது. இதில் ஆராத்யா கதாநாயகியாகவும், சத்யா யாது பயமுறுத்தும் பயங்கரமான காதலனாகவும் நடித்துள்ளார்” என்றார்.