Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: 'ஒரு கை ஓசை'க்கு வந்த எதிர்ப்பு

29 அக், 2024 - 01:04 IST
எழுத்தின் அளவு:
Flashback:-Oru-Kai-Osai


பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.பாக்யராஜ் 'புதிய வார்ப்புகள்' படத்தின் மூலம் நடிகரானார். அதன் பிறகு சுவரில்லாத சித்திரங்கள், கன்னி பருவத்திலே படங்களில் நடித்தார். அவர் தயாரித்து, இயக்கிய முக்கியமான படம் 'ஒரு கை ஓசை'. இந்த படத்தை உருவாக்கும்போது அவர் பல எதிர்ப்புகளை சநதித்தார்.
முதலாவதாக படத்தின் தலைப்புக்கே எதிர்ப்பு. ஒரு கை கொண்டு எப்படி ஓசை எழுப்ப முடியும், படத்தின் டைட்டில் நெகட்டிவாக உள்ளது. 'இரு கை ஓசை' என்று மாற்றுங்கள் என விநியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இதற்கு விளக்கமளித்த கே.பாக்யராஜ் “சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்பார்கள். ஆனால் நான் என் படத்திற்கு சுவரில்லாத சித்திரங்கள் என நெகட்டிவ் தலைப்பு தான் வைத்தேன். அந்த படம் வெற்றி பெறவில்லையா என்று கேட்டு அவர்களை சமாளித்தார்.

அடுத்து கே.பாக்யராஜ் இந்த படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடித்தார். பாக்யராஜின் பிளஸ் பாயின்ட்டே அவரது டயலாக்கும், டயலாக் டெலிவரியும்தான். அதைத்தான் மக்கள் ரசித்தார்கள். அப்படி இருக்கும்போது இப்போது வாய் பேச முடியாதவராக நடித்தால் எப்படி? என்று அதற்கும் எதிர்ப்பு வந்தது. அப்போது பாக்யராஜ் “பேச முடியாதவன் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லையா? அவன் சிரிக்க மாட்டானா, இந்த கேரக்டரிலும் மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைப்பேன்” என்று சவால் விட்டு அதில் வெற்றியும் பெற்றார்.

மூன்றாவது எதிர்ப்பு நாயகியாக நடித்த அஸ்வினி பற்றி, அப்போதுதான் அவர் 'உதிரிப்பூக்கள்' படத்தில் சோகமான ஒரு கேரக்டரில் நடித்தார். அதிலும் அவர் முகமே சோகமான முகம்தான். ஆனால் அப்படிப்பட்டவரை வேறொரு கோணத்தில் காட்ட விரும்பினார் பாக்யராஜ். அதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர் தோற்றார். படம் வெளிவந்ததும் அஸ்வினியின் முதிர்ச்சியான தோற்றம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. பின்னாளில் பாக்யராஜும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சட்டவிரோத பண பரிமாற்றம்: இயக்குனர் அமீருக்கு சம்மன்சட்டவிரோத பண பரிமாற்றம்: இயக்குனர் ... ராம்கோபால் வர்மாவின் பான் இந்தியா படத்தில் ஆராத்யா ராம்கோபால் வர்மாவின் பான் இந்தியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in