கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் 'ஆப்பிள் பெண்ணாக' கொண்டாடப்பட்டவர் பூமிகா. 'ரோஜா கூட்டம்', 'ஜில்லுனு ஒரு காதல்' என பல வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது 'பிரதர்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். பிரதர் படத்தின் புரோமோஷனுக்காக சென்னை வந்துள்ள பூமிகா தனது நேர்காணல்களில் மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார். அதில் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "நான் தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் மணிரத்தினம் சார் கம்பெனியிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. மணிரத்தினம் சார் படத்தில் நடிக்க விருப்பமா? என்று கேட்டார்கள். அதற்கு யாராவது மறுப்பு சொல்வார்களா நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.
பின்னர் தான் தெரிந்தது அதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது. அப்போது நான் பல தமிழ் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நீங்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். எனக்கு அது சரி என்று பட்டது. அதனால் நடிக்க மறுத்து விட்டேன்.
அந்தப் படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். நான் நடிக்க இருந்த கேரக்டரில் சிம்ரன் நடித்தார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை தவறவிட்ட வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு. இவ்வாறு பூமிகா கூறியிருக்கிறார்.