ஹிந்தி வெப் சீரிஸில் நடிக்க மும்பை சென்ற சமந்தா | கஜினி படம் ஏற்படுத்திய பெரும் தாக்கம் : சுனைனா நெகிழ்ச்சி | எப்போதுமே டிவி சீரியல்களில் நடிக்க மாட்டேன்: நடிகை சுமன் ராணா திட்டவட்டம் | கவனமாக இருங்கள் : ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு | தெலுங்கில் ஜன., 31ல் வெளியாகும் மதகஜராஜா | சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன் பட தலைப்பு ‛பராசக்தி' | மஞ்சுவாரியர் படத்தை இலவசமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்ய போவதாக இயக்குனர் அறிவிப்பு | மோகன்லாலை ஒரு மணி நேரம் பேட்டி எடுத்த கேரள அமைச்சர் | 2025ல் மலையாளத்தில் முதல் 50 கோடி வசூல் படமாக பதிவு செய்த 'ரேகசித்திரம்' | கிஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் 'ஆப்பிள் பெண்ணாக' கொண்டாடப்பட்டவர் பூமிகா. 'ரோஜா கூட்டம்', 'ஜில்லுனு ஒரு காதல்' என பல வெற்றி படங்களில் நடித்தவர். தற்போது 'பிரதர்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். பிரதர் படத்தின் புரோமோஷனுக்காக சென்னை வந்துள்ள பூமிகா தனது நேர்காணல்களில் மலரும் நினைவுகளை பகிர்ந்து உள்ளார். அதில் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது "நான் தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் மணிரத்தினம் சார் கம்பெனியிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. மணிரத்தினம் சார் படத்தில் நடிக்க விருப்பமா? என்று கேட்டார்கள். அதற்கு யாராவது மறுப்பு சொல்வார்களா நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.
பின்னர் தான் தெரிந்தது அதில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்பது. அப்போது நான் பல தமிழ் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நீங்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தால் எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படும் என்று கூறினார்கள். எனக்கு அது சரி என்று பட்டது. அதனால் நடிக்க மறுத்து விட்டேன்.
அந்தப் படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். நான் நடிக்க இருந்த கேரக்டரில் சிம்ரன் நடித்தார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை தவறவிட்ட வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு. இவ்வாறு பூமிகா கூறியிருக்கிறார்.