எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய ‛நேரம்' படத்தில் நிவின்பாலியின் தங்கையாகவும் அதன் பிறகு ‛ஓம் சாந்தி ஒசானா' படத்தில் அவரது தோழியாகவும் நடித்தவர் நடிகை அஞ்சு குரியன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் திலீப், அர்ஜுன் இணைந்து நடித்த ஜாக் டேனியல் படத்திலும் அதிரடி கதாநாயகியாக நடித்திருந்தார். சென்னையிலேயே படித்து வளர்ந்த இவர் தமிழில் சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் கூட ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கே ஸ்கை டைவிங் சாகசம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க இருக்கிறார் அஞ்சு குரியன். இவருக்கும் ரோஷன் என்பவருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றுள்ளது. மணமகனை பற்றிய அதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் அஞ்சு குரியன்.
மேலும் இது குறித்து தனது மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தும்போது, “எண்ணிக்கையற்ற ஆசிர்வாதங்கள் என்னை இந்த தருணத்திற்காக வழி நடத்தியதற்காக கடவுளுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருப்பேன். இந்த பயணம் கலகலப்பும் காதலும் நிறைந்ததாக ஒரு அதிசயத்திற்கு எந்த வித குறைவும் இல்லாததாக அமைந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.