நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கடந்த 1998ல் மலையாளத்தில் வெளியான படம் சம்மர் இன் பெத்லகேம். சுரேஷ்கோபி, ஜெயராம், மஞ்சு வாரியர் நடித்திருந்த இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கலகலப்பான ஒரு காதல் கதையாக உருவாகி இருந்த இந்த படத்தை சிபி மலயில் இயக்கியிருந்தார். பிரபல இயக்குனர் ரஞ்சித் கதை எழுதியிருந்தார். படத்தை கோக்கர் பிலிம்ஸ் சார்பாக சியாத் கோக்கர் என்பவர் தயாரித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் சிபி மலயில், கதாசிரியர் ரஞ்சித், தயாரிப்பாளர் சியாத் கோக்கர் மூவரும் 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக ஒன்றிணைந்துள்ளார்கள்.
இதுகுறித்த ஒரு அறிவிப்பை '27 வருடங்களுக்கு பிறகு' என்கிற ஒரு புதிய போஸ்டருடன் வெளியேற்றி உள்ளார்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சம்மர் இன் பெத்லகேம் படத்தின் தயாரிப்பாளர் சியாத் கோக்கர் பேசும்போது அதன் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பேச்சு போய்க் கொண்டு இருக்கிறது என்று சொல்லி இருந்தார். ஒருவேளை அந்த இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பாகத்தான் இது இருக்குமோ என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.