அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்தபடியாக தற்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் நடிகர் திலீப். இவரது நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் நடிப்பிற்கு என குடும்ப ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக ஒரு நடிகையின் கடத்தல் வழக்கில் சிக்கி நிறைய பிரச்னைகளை சந்தித்த இவர், இன்னொரு பக்கம் தனது திரையுலக பயணத்திலும் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொண்டு சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடித்த படங்கள் எதுவும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் தனது 150வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வழக்கமான ஹீரோக்களின் 150ஆவது படங்கள் போல அதிரடி ஆக்சன் படமாக இல்லாமல், குடும்பங்களுடன் பார்த்து ரசிக்கும் படமாகவே உருவாகிறது. இந்த படத்திற்கு தற்போது 'பிரின்ஸ் அண்ட் பேமிலி' என டைட்டில் வைக்கப்பட்டு திலீப்பின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் திலீப்புடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தியான் சீனிவாசனும் நடிக்கிறார். பின்ட்டோ ஸ்டீபன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு போலி என்கவுண்டரை மையப்படுத்தி வெளியாகி கவனம் ஈர்த்த ஜனகனமன படத்திற்கு கதை எழுதிய ஷரிஷ் முகமது தான் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்.