நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர் கடந்த சில வருடங்களாகவே மலையாள திரையுலகில் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதே சமயம் சற்றும் பரபரப்புக்கு எந்த பஞ்சமும் வைக்காத பாலா தனது திருமணங்கள் குறித்தான சர்ச்சையில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார். சமீபத்தில் தனது முறைப்பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார் பாலா. இது இவருக்கு நான்காவது திருமணமாகும்.
கடந்த 2008லேயே கர்நாடகாவை சேர்ந்த சந்தனா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்ட பாலா, இரண்டு வருடங்களில் அவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு மலையாள பின்னணி பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவந்திகா என்கிற ஒரு குழந்தையும் உள்ள நிலையில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார் பாலா. அதைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து கடந்த 2021ல் கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்கிற பெண்ணை திருமணம் செய்தார். அவருடனும் வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த நிலையில் தான் தற்போது முறைப்பெண்ணான கோகிலாவை திருமணம் செய்துள்ளார் பாலா.
ஆனால் ஆச்சரியமாக பாலாவின் உறவுப்பெண்ணான கோகிலா சிறுவயதிலிருந்தே பாலாவை நேசித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பாலாவின் மீதான தனது அன்பை யாருக்கும் தெரியாமல் தனது டைரியில் எழுதி பாதுகாத்து வந்துள்ளார். தனது மூன்றாவது மனைவி எலிசபெத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் மன அமைதிக்காக பாலா சென்னையில் தங்கி இருந்த சமயத்தில் தான் கோகிலா தன்மீது சிறுவயதில் இருந்தே கொண்டிருந்த காதல் அவருக்கு தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கோகிலாவின் அன்பு மற்றும் வயதான தனது தாயின் ஆசை ஆகியவற்றை நிறைவேற்றும் விதமாகவும் கோகிலாவை தற்போது உடனடியாக திருமணம் செய்து கொண்டுள்ளார் பாலா. அந்த வகையில் தனது சிறு வயது காதல் பாலாவுடன் முதல் திருமணத்தில் கைகூடாவிட்டாலும் அவரது நான்காவது திருமணத்திலாவது ஒன்று சேர முடிந்ததே என்கிற சந்தோஷத்தில் இருக்கிறாராம் புது மனைவி கோகிலா.