இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து உள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தன்னை சாய் பல்லவி அண்ணா என்று அழைத்ததாக ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்தார். எப்போதுமே டீச்சர் என்றாலே மாணவர்கள் எல்லாம் தெறிச்சு ஓடுவாங்க. ஆனா மலர் டீச்சருக்கு கிடைச்ச மரியாதையை பார்த்ததும் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அதோடு அவர் நடிச்ச பிரேமம் படத்தை பார்த்த பிறகு நானும் அவரோட ரசிகன் ஆயிட்டேன்.
ஒருநாள் சாய் பல்லவியோட மொபைல் நம்பர வாங்கி அவரிடத்தில் பேசினேன். ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கீங்க. அறிமுகக் காட்சியும் கிளைமாக்ஸும் சூப்பரா இருக்குன்னு சொன்னேன். அதற்கு சாய் பல்லவி, ரொம்ப நன்றி அண்ணா என்று சொன்னார். அதை கேட்டு செம கடுப்பாயிட்டேன். நிறுத்துமா, மலர் டீச்சர்கிட்ட பேசுவது மாதிரி நான் பேசுறேன். நீங்க ஏன் சாய் பல்லவி மாதிரி பேசுறீங்க. அண்ணான்னு மட்டும் அழைக்காதீங்க. ஏன்னா என்னைக்காவது ஒருநாள் நாம சேர்ந்து நடிப்போம்ன்னு அவர்கிட்ட சொன்னேன். அப்படி அப்போ சாய் பல்லவிகிட்ட நான் சொன்னது இப்போ இந்த அமரன் படம் மூலமா நிறைவேறி இருக்குன்னு சொன்ன சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஒவ்வொரு படத்திலும் தன்னை ஒரு சிறந்த நடிகையா உயர்த்தி கொண்டே வருகிறார். அவர் ஒரு பிராண்ட் நடிகை என்றும் கூறினார்.