ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |
நடிகர் ரஜினிகாந்த்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டன்ட் மூலம் சரி செய்யப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில் வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவர் விரைவில் 'கூலி' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் மட்டும் வெளியானது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அவரது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர் எப்போது மீண்டும் படப்பிடிப்புக்குப் போவார் என்றும் எதிர்பார்த்து வந்தனர்.
இதனிடையே, அவர் நடித்து கடந்த வாரம் வெளியான 'வேட்டையன்' படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள அவரை படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த புகைப்படங்கள் நேற்று வெளியாகின. ரஜினிகாந்த் அதே பழைய உற்சாகத்துடன் இருப்பதைப் பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 'கூலி' படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்வார் என்று வெளியான செய்தி தற்போது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.