ரஜினியின் புதிய புகைப்படம் : ரசிகர்கள் மகிழ்ச்சி | மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் 'வாடிவாசல்' ? | 'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா |
நடிகர் ரஜினிகாந்த்திற்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டன்ட் மூலம் சரி செய்யப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில் வீடு திரும்பினார்.
இந்நிலையில் அவர் விரைவில் 'கூலி' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்ற தகவல் மட்டும் வெளியானது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக அவரது புகைப்படம் எதுவும் வெளியாகவில்லை. அவரது உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர் எப்போது மீண்டும் படப்பிடிப்புக்குப் போவார் என்றும் எதிர்பார்த்து வந்தனர்.
இதனிடையே, அவர் நடித்து கடந்த வாரம் வெளியான 'வேட்டையன்' படத்தின் வெற்றியைப் பகிர்ந்து கொள்ள அவரை படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அந்த புகைப்படங்கள் நேற்று வெளியாகின. ரஜினிகாந்த் அதே பழைய உற்சாகத்துடன் இருப்பதைப் பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 'கூலி' படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்வார் என்று வெளியான செய்தி தற்போது ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.