Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் 'வாடிவாசல்' ?

15 அக், 2024 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Vaadivasal-which-is-postponed-again-and-again

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வாடிவாசல்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த 2021ம் வருடம் ஜூலை மாதம் 16ம் தேதி அதன் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு வெளியிட்டார். சிசு செல்லப்பா எழுதிய நாவலை மையமாக வைத்து 'ஜல்லிக்கட்டு' பற்றிய படமாக அந்தப் படம் தயாராக உள்ளதாக சொல்லப்பட்டது. அதற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றையும் வாங்கி அதனுடன் பழகியும் வந்தார் சூர்யா. 2022ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அந்தக் காளையுடன் அவர் நடந்து சென்ற வீடியோவையும் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

அந்தப் படத்தின் அறிவிப்புக்குப் பிறகு சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகளும், குழப்பங்களும் இருந்து வந்தன. தனக்கு திருப்புமுனை தந்த பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தைத் தயாரித்து நடிக்க ஆரம்பித்து முதல் கட்டப் படப்பிடிப்புடன் அவற்றிலிருந்து விலகினார் சூர்யா. அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவித்து பின் அந்தப் படத்தைத் தள்ளி வைக்கிறோம் என்றார்கள். அதன்பின் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிக்க ஆரம்பித்து படத்தையும் முடித்துவிட்டார் சூர்யா.

இப்போது சூர்யாவின் 45வது படமாக ஆர்ஜே பாலாஜி இயக்க உள்ள படத்தில் நடிக்கப் போகிறார். அப்படி என்றால் 'வாடிவாசல்' படம் மேலும் தள்ளிப் போகும் என்பது சொல்லாமலேயே தெரிந்துவிடும். 'விடுதலை 2' படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் 'வாடிவாசல்' படத்தை ஆரம்பிப்பார் என்றும் சொன்னார்கள். அப்படம் முடிந்து டிசம்பர் மாதமும் வெளியாகப் போகிறது.

அதற்கடுத்து 'வாடிவாசல்' படத்தை இயக்க வெற்றிமாறன் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது பாலாஜி இயக்க உள்ள படத்திற்குப் போகிறார் சூர்யா. அதன் வேலைகள் முடிந்து அடுத்த ஆண்டு தீபாவளி சமயத்தில் வெளியாகலாம்.

எப்போது 'வாடிவாசல்' என்று பெயர் வைத்தார்களோ அதன் 'வாசல்' இன்னும் திறக்கப்படாமலேயே வாடிப் போய் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே ... ரஜினியின் புதிய புகைப்படம் : ரசிகர்கள் மகிழ்ச்சி ரஜினியின் புதிய புகைப்படம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in