'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

ராஜ்கிரண் நடிப்பில் பா.பாண்டி படத்தை இயக்கிய தனுஷ் அதையடுத்து ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார். தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வெளியாகும் முன்பே உடனடியாக ‛இட்லி கடை' என்ற மற்றொருபடத்தை இயக்கி, நடித்து வருகிறார். அதோடு, குபேரா, இளையராஜா வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் ஒரு படம் மற்றும் ஹிந்தியில் ஒரு படங்களிலும் நடித்து வருகிறார்.
கைவசமுள்ள இந்த படங்களை எல்லாம் முடித்ததும் மீண்டும் ஒரு படத்தை அவர் இயக்கி நடிக்கப் போகிறார். அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், பிரகாஷ்ராஜ் முக்கியம் வேடத்திலும் நடிக்க உள்ளனர். ஏற்கனவே தொடரி என்ற படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




