'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
இந்திய சினிமாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்களாக இருப்பவை தமிழ்ப்படமான 'கங்குவா', தெலுங்குப் படமான 'புஷ்பா 2'. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதிகளை ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.
'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதியும், 'புஷ்பா 2' படம் டிசம்பர் 6ம் தேதியும் வெளியாக உள்ளது. இரண்டு படங்களையுமே பான் இந்தியா வெளியீடாக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல் வெளியானது. இப்படத்தின் வெளியீடு பற்றி இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இப்படத்தை 2025 பொங்கலுக்கு வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் ராம் சரணின் அப்பா சிரஞ்சீவி நடித்துள்ள 'விஷ்வம்பரா' படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
ஒரு வேளை 'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடு என்றால் மகனுக்காக 'விஷ்வம்பாரா' படத்தை சிரஞ்சீவி தள்ளி வைப்பாரா என்ற கேள்வியும் டோலிவுட்டில் எழுந்துள்ளது.