'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்திய சினிமாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்களாக இருப்பவை தமிழ்ப்படமான 'கங்குவா', தெலுங்குப் படமான 'புஷ்பா 2'. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதிகளை ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.
'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதியும், 'புஷ்பா 2' படம் டிசம்பர் 6ம் தேதியும் வெளியாக உள்ளது. இரண்டு படங்களையுமே பான் இந்தியா வெளியீடாக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல் வெளியானது. இப்படத்தின் வெளியீடு பற்றி இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இப்படத்தை 2025 பொங்கலுக்கு வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் ராம் சரணின் அப்பா சிரஞ்சீவி நடித்துள்ள 'விஷ்வம்பரா' படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
ஒரு வேளை 'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடு என்றால் மகனுக்காக 'விஷ்வம்பாரா' படத்தை சிரஞ்சீவி தள்ளி வைப்பாரா என்ற கேள்வியும் டோலிவுட்டில் எழுந்துள்ளது.