மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி படமான 'சந்திரமுகி, முதல் 100 கோடி படமான 'சிவாஜி', முதல் 800 கோடி படமான '2.0' ஆகிய பெருமையைப் பெற்ற ஒரே நடிகர் ரஜினிகாந்த். கடந்த வருடத்தில் வெளியான படங்களில் அதிக வசூலைப் பெற்ற படமாக அவர் நடிப்பில் வெளிவந்த 'ஜெயிலர்' படம் அமைந்தது. அப்படத்தின் வசூல் 600 கோடி என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல்.
அந்த வசூலை அடுத்து வந்த சில முன்னணி நடிகர்களின் படங்கள் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'லியோ', இந்த வருடம் வெளிவந்த 'தி கோட்' ஆகியவை அதைவிடக் குறைவாகவே வசூலித்தது.
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக ரஜினியின் 'வேட்டையன்' படம் நாளை வெளியாக உள்ளது. இந்தப் படம் அவரது 'ஜெயிலர்' வசூலை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடமும், திரையுலகத்திலும் ஏற்பட்டுள்ளது.
பான் இந்தியா வரவேற்புக்கான நடிகர்களாக அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபட்டி ஆகியோர் இப்படத்தில் கூடுதலாக நடித்திருப்பதும் மற்ற மாநிலங்களிலும் படம் வசூலைக் குவிக்கக் காரணமாக அமையலாம் என்கிறார்கள். 'ஜெயிலர்' வசூலை மட்டும் முறியடிக்குமா அல்லது தமிழ் சினிமாவின் நம்பர் 1 வசூல் படமாக இருக்கும் '2.0' வசூலையும் சேர்த்தே முறியடிக்குமா என்பது இனி வரும் நாட்களில் தெரியும்.
நாளை(அக்., 10) மட்டும் 5 காட்சிகள்
இதனிடையே வேட்டையன் படம் நாளை வெளியாகும் சூழலில் நாளை ஒருநாள் மட்டும் தமிழகத்தில் தியேட்டர்கள் உரிமையாளர்கள் 5 காட்சிகள் நடத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாளை முதல்காட்சி காலை 9மணிக்கு துவங்குகிறது.