சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் தங்கலான். ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கும் வந்த இந்த படம் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் வரவேற்பு பெற்றது . இந்த நிலையில் அடுத்தபடியாக தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு படக்குழு தயாரானது. ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
திருவள்ளுவரை சேர்ந்த பொற்கொடி என்பவர் அந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில், புத்த மதம் குறித்து புனிதமாகவும், வைணவம் பற்றி நகைச்சுவையாகவும் சித்தரிக்கும் விதமாக இந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் இந்த தங்கலான் படம் ஓடிடியில் வெளியானால் இரண்டு பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது. இதனால் தங்கலான் ஓடிடியில் வெளியாவது தள்ளிப் போகும் என்று தெரிகிறது.