ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் |
நடிகர் தனுசும், ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 20 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்தனர். பின்னர் இவர்கள் சட்டபூர்வமான விவாகரத்து கோரி பரஸ்பரம் ஒப்புதலோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தற்போது முதன்மை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணையும் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. இவர்கள் இருவரும் 7ந் தேதி (நேற்று) நேரில் ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அப்படி ஆஜராகி விவாகரத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக வாக்குமூலம் அளித்தால் கோர்ட் முறைப்படி விவாகரத்து வழங்கி விடும்.
ஆனால் நேற்று இருவருமே கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும், இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க உறவினர்களும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டு இருவரும் ஆஜராகவில்லையா என்று தெரியவில்லை. என்றாலும் வருகிற 19ம் தேதி உண்மை நிலவரம் தெரியவரும்.