நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மீண்டும் திரிஷா நடித்து வரும் இந்த படத்தில் சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இந்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமார், பிரசன்னா இணைந்து நடித்த காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனது.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், இதுபோன்ற தவறான வேலைகளில் யாரும் ஈடுபடாதீர்கள் என்று ஒட்டுமொத்த பட குழுவுக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, செக்யூரிட்டியை பலப்படுத்தி உள்ளார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை வேகமாக நடத்தி வரும் ஆதிக் ரவிச்சந்திரன் இன்னும் ஒரே மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு குட் பேட் அக்லியை வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறார்.