சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பிரபல கல்வி நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் ஜசரி கணேஷ். தமிழில் கோமாளி, வெந்து தனிந்தது காடு, மூக்குத்தி அம்மன் போன்ற பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். அடுத்து அவரது தயாரிப்பாளர் மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாக உள்ளது. இதில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்க, சுந்தர் சி இயக்க உள்ளார்.
இந்த நிலையில் நடிகர் தனுஷை வைத்து புதிய படம் ஒன்றை இவர் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இதனை போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார் என கூறப்பட்டது. இதனை உறுதிபடுத்தும் விதமாக இப்போது நடைபெற்ற ஜசரி கணேஷ் பிறந்த நாள் பார்டியில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். இதன்மூலம் இவர்கள் கூட்டணியில் ஒரு படம் உருவாவது உறுதியாகி உள்ளது.
தனுஷ் தற்போது நடிப்பு, இயக்கம் என பிஸியாக உள்ளார். ராயன் படத்திற்கு பின் அவரது இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதுதவிர இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருவதோடு நடிகராக குபேரா, இளையராஜா வாழ்க்கை படம், தேரே இஸ்க் மெயின் ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன.