'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
நடிகர் விஜய் தனது 69வது படத்தை முடித்ததும் முழு நேர அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், அவரது இந்த அரசியல் வருகை குறித்து நவரச நாயகன் கார்த்திக் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதனால் தம்பி விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை நான் வரவேற்கிறேன். சினிமாவில் தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அவர் அரசியலுக்கு வருவது ரொம்ப பெரிய விஷயம்.
ஆனால் என்னை பொருத்தவரை அவர் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட்டாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம். காரணம் தான் சொல்ல விரும்பும் கருத்துக்களை சினிமா மூலம் வெளிப்படுத்தினால் அது எளிதில் மக்களை போய் சேரும். அதனால் விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே எனது கருத்து,'' என்று கூறியிருக்கிறார் நடிகர் கார்த்திக்.