நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! |
நடிகர் விஜய் தனது 69வது படத்தை முடித்ததும் முழு நேர அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், அவரது இந்த அரசியல் வருகை குறித்து நவரச நாயகன் கார்த்திக் ஒரு கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அதனால் தம்பி விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பதை நான் வரவேற்கிறேன். சினிமாவில் தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது அவர் அரசியலுக்கு வருவது ரொம்ப பெரிய விஷயம்.
ஆனால் என்னை பொருத்தவரை அவர் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட்டாலும் சினிமாவிலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம். காரணம் தான் சொல்ல விரும்பும் கருத்துக்களை சினிமா மூலம் வெளிப்படுத்தினால் அது எளிதில் மக்களை போய் சேரும். அதனால் விஜய் சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே எனது கருத்து,'' என்று கூறியிருக்கிறார் நடிகர் கார்த்திக்.