தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து |

நடிகை மாளவிகா மோகனன் மலையாளம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மாஸ்டர், மாறன், தங்கலான் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "பாலிவுட்டுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடு இருப்பதை காண்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும் ஒரு கலைஞராக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெவ்வேறு மொழி, உணவு மற்றும் பேசக்கூடாத விதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நடிகர்கள் ஒரு நவீன நாடோடிகளை போன்றவர்கள்.
ஒரு நாள் ஐதராபாத் என்றால் அடுத்த நாள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமம் என பயணிக்க வேண்டியிருக்கும். நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு படம் ஹிட்டானால், நடிகர் தான் அதற்கான காரணம் என்பார்கள். ஒரு வேளை படம் ஓடவில்லை என்றால் நாயகியை குறை சொல்வார்கள். தென்னிந்திய சினிமாவில் இது சாதாரணமானது" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.