சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

நடிகை மாளவிகா மோகனன் மலையாளம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மாஸ்டர், மாறன், தங்கலான் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "பாலிவுட்டுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடு இருப்பதை காண்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும் ஒரு கலைஞராக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெவ்வேறு மொழி, உணவு மற்றும் பேசக்கூடாத விதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நடிகர்கள் ஒரு நவீன நாடோடிகளை போன்றவர்கள்.
ஒரு நாள் ஐதராபாத் என்றால் அடுத்த நாள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமம் என பயணிக்க வேண்டியிருக்கும். நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு படம் ஹிட்டானால், நடிகர் தான் அதற்கான காரணம் என்பார்கள். ஒரு வேளை படம் ஓடவில்லை என்றால் நாயகியை குறை சொல்வார்கள். தென்னிந்திய சினிமாவில் இது சாதாரணமானது" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.