மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் 'வாடிவாசல்' ? | 'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை மாளவிகா மோகனன் மலையாளம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் மாஸ்டர், மாறன், தங்கலான் ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "பாலிவுட்டுக்கும் தென்னிந்திய சினிமாவுக்கும் கலாச்சார ரீதியான வேறுபாடு இருப்பதை காண்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும் ஒரு கலைஞராக அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெவ்வேறு மொழி, உணவு மற்றும் பேசக்கூடாத விதிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நடிகர்கள் ஒரு நவீன நாடோடிகளை போன்றவர்கள்.
ஒரு நாள் ஐதராபாத் என்றால் அடுத்த நாள் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு குக்கிராமம் என பயணிக்க வேண்டியிருக்கும். நடிகர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. ஒரு படம் ஹிட்டானால், நடிகர் தான் அதற்கான காரணம் என்பார்கள். ஒரு வேளை படம் ஓடவில்லை என்றால் நாயகியை குறை சொல்வார்கள். தென்னிந்திய சினிமாவில் இது சாதாரணமானது" என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.