மகிழ்ச்சியை உணர வெளியில் இருந்து உதவியை எதிர்பார்க்காதீர்கள் : மஞ்சு வாரியர் | ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷினின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு | பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் கிச்சா சுதீப் | அஜித்திற்கு போட்டியாக களம் இறங்கிய கீர்த்தி சுரேஷ் | வேட்டையன் படத்தில் நானி நடிக்க மறுத்தாரா? | இயக்குனராக அறிமுகமாகும் வேட்டையன் வில்லன் நடிகர் ; கதாநாயகியாக பிசாசு நடிகை | விக்ரம் பட நடிகைக்கு போதை கும்பல் மிரட்டல் | மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மலையாள நடிகர் கைது | நிவின்பாலியின் 'டியர் ஸ்டூடன்ட்ஸ்' படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா | பிளாஷ்பேக் : தயாரிப்பு நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட சிவாஜி : அவரையே தனது தயாரிப்பாளராகவும் மாற்றிய தருணம் |
மலையாளத்தில் பிரபல நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து 'லூசிபர்' என்கிற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் அதை தொடர்ந்து மோகன்லாலை வைத்து மீண்டும் 'ப்ரோ டாடி' என்கிற படத்தை இயக்கி அதையும் வெற்றி படமாக கொடுத்தவர். தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக 'எம்புரான்' என்கிற படத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தில் நடித்த முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த பாகத்திலும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்தது. சமீப நாட்களாக இதன் படப்பிடிப்பு குஜராத்தில் நடைபெற்றது. தற்போது அங்கே படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் அங்கிருந்து ஹைதராபாத்திற்கு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக வந்து இறங்கியுள்ளனர். தற்போது ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இது குறித்து பிரித்விராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “குஜராத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு எம்புரான் படப்பிடிப்பிற்காக இடம்பெயர்ந்துள்ளோம். கிட்டத்தட்ட 1400 கிலோ மீட்டர்களை 12 மணி நேரத்தில் கடந்துள்ளோம். அந்த அளவிற்கு வெறிபிடித்த ஒரு குழு” என்று தனது படக்குழுவிற்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு குறித்து கமெண்ட் தெரிவித்துள்ள பிரித்விராஜன் மனைவி சுப்ரியா, “அப்படியே மாற்றுப் பாதையில் திரும்பி கொஞ்சம் வீட்டிற்கும் வந்து செல்லுங்கள் டைரக்டர் சார்” என்று கூறியுள்ளார்.